17668 சிறுகதை மஞ்சரி: ஐம்பதாவது இதழ் சிறப்பிதழ்.

மு.தயாளன் (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்). திருக்கோணமலை: இலக்சுமி பிரசுராலயம், 91, பாரதி வீதி, 1வது பதிப்பு, புரட்டாதி 2024. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).  

156 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 29×21 சமீ.

இது சிறுகதை மஞ்சரியின் 50ஆவது இதழாகவும் சிறப்பிதழாகவும் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் கேணிப்பித்தன்-அருளானந்தம், அன்னலட்சுமி இராஜதுரை, ஷெல்லிதாசன், மண்டைதீவு கலைச்செல்வி, அலெக்ஸ் பரந்தாமன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், புலோலியூர் அ.இரத்தினவேலோன், கோ.ஒளிவண்ணன், திக்குவல்லை கமால், தாட்சாயணி, சந்திரா இரவீந்திரன், ஆதிலட்சுமி சிவகுமார், சியாமளா யோகேஸ்வரன், நோயல் நடேசன், கே.எஸ்.சுதாகர், குரு சதாசிவம், உரும்பிராய் எம்.ரி.செல்வராஜா, ந.ஜெயரூபலிங்கம், ஆதவன், கந்தையா பத்மானந்தன், குலசிங்கம் வசீகரன், ஸ்ரீரஞ்சனி, விமல் பரம், நவஜோதி ஜோகரட்ணம், பூங்கோதை, யோர்ச் அருளானந்தம், ஐ.கிருத்திகா, அர்ஷா, வீ.மைக்கல் கொலின், பிரமி, றொசில்டா அன்டன், சம்பூர் சமரன், அகரா, நிலாவெளியூர் கெஜதர்மா, சுரேந்திரன் தர்சித் ராகுல், சோலையூர் குருபரன், குணறுபேஸ், கனகசூரியம் யோகானந்தம், ச.சிறீரங்கன், ஜீவரட்ணம், மு.தயாளன், ராஜேஸ் பாலா ஆகிய படைப்பாளிகளின் 42 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

11121 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி ஆறு : சி-சௌ.

சி.பத்மநாதன் (பிரதம ஆசிரியர்), க.இரகுபரன் (உதவிப் பதிப்பாசிரியர்), எஸ். தெய்வநாயகம் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2003.