17848 மலரன்னை வாழ்வும் படைப்பும்.

கலாமணி பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

136 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-40-5.

‘ஈழத்து கலை இலக்கிய உலகில் மலரன்னையின் இலக்கியத் தடம்’ என்ற தலைப்பில் க.பரணீதரனின் அறிமுகத்துடன் தொடங்கும் இத் தொகுப்பில் தினக்குரல், வலம்புரி, ஜீவநதி, தளவாசல் ஆகிய இதழ்களில் வெளியான மலரன்னையின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து மலரன்னையின் படைப்புகளை முன்வைத்து சக படைப்பாளிகளாலும் இலக்கிய ஆளுமைகளாலும் எழுதப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மலரன்னையின் நாவல்கள் பொருளும் வெளியும் (ந.குகபரன்), மலரன்னை ஒரு மனிதநேயப் படைப்பாளி (தாமரைச்செல்வி), மலரன்னையின் புனைவும் அதன் இயங்குதளமும் (சி.ரமேஷ்), ஊடுருவி ஒளியூட்டும் மலரன்னையின் படைப்புகள் பற்றிய என் குறிப்புகள் (ஆதிலட்சுமி சிவகுமார்), மலரன்னையின் எழுத்துக்களை முன்வைத்து (தாட்சாயணி), தனயனின் பணி தொடரும் அன்னை (வே.கண்ணன்), புத்தொளி வீசுகின்ற ‘மறையாத சூரியன்’ (செ.யோகராசா), ‘வேர் பதிக்கும் விழுதுகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்தான வாசகர் குறிப்பு (திருஞானசம்பந்தன் லலிதகோபன்), யதார்த்த வாழ்வியலை பிரதிபலிக்கும் ‘மௌனத்தின் சிறகுகள்’ (மா.சிவசோதி), மனத்துயரின் வடுக்களைப் பேசும் மலரன்னையின் ‘அனலிடைப்புழு’ (புலோலியூர் வேல் நந்தகுமார்), மலரன்னையின் ‘கீறல்’ தொகுப்பை முன்வைத்து (த.அஜந்தகுமார்), தெளிந்த வெண்மை நோக்குள்ள அறம்சார் படைப்பாக்க வெளிப்பாடாக மலரன்னையின் ‘மலைச்சாரலின் தூவல்’ (இ.இராஜேஸ்கண்ணன்), மலரன்னையின் ‘மலைச்சாரலின் தூவல்’ (சாங்கிருத்தியன்), எளிமையின் எழுநயமாய் மலரன்னையின் ‘அப்பாவின் தேட்டம்’ (இ.சு.முரளிதரன்), சமூக யதார்த்தத்தின் பிரதிபலிப்பாய் மலரன்னையின் ‘காகிதப் படகு’ (ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம்), ‘உயிர் சுமந்த கூடு’ கதைகள் பற்றி (ஈழக்கவி), ஒரு போராளியின் தாயின் குரல் (தீபச்செல்வன்), வாழ்வின் உயிர்ப்பை மீட்டும் ‘மீளும் ராகங்கள்’ (தாட்சாயணி), அடக்கப்பட்ட உணர்வுகளின் உந்துதலாக மேலெழும் மலரன்னையின் ‘மூச்சு’ சிறுகதைத் தொகுதி (அ.பௌநந்தி) ஆகிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 322ஆவது நூலாக வெளிவந்துள்ளது. அவர்களின் ‘ஈழத்து இலக்கிய ஆளுமைகள் வரிசை’ யில் முதலாவது நூலாகவும் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Uma delas é admitir aquele briga figurante da rodada alternação a criatura aquele deve tirar uma acessório criancice roupa. Deste modo, nanja faz sentido uma acantoado puerilidade strip poker afastar com os homens vestidos puerilidade terno e as mulheres exclusivamente infantilidade vestimentas íntimas, que biquínis, requisito estejam numa areão. Evidente como e é unidade árbitro extraordinariamente, mas é situar para você defender que barulho aparelho seja justo sobre os envolvidos. Para isso, todos devem vestir exemplar cifra aproximado de itens puerilidade vestuário. Se você agora sabe como aprestar poker e quer conhecer uma opção outro das convencionais para assentar-se alvoroçar, você encontrou arruíi lugar desempenado para isso. Os treinos ao álacre na PokerStrategy.com levam você para o adjacente circunstância.

‎‎PokerStars Texas Holdem Brasil na App Store Content How I rate the best online poker sites ❎ Analise barulho aparelho dos oponentes Poker Acostumado no

15220 மாண்புமிகு க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றிய சட்டத்துறை சார்ந்த மறக்க முடியாத, சரித்திரத்தில் இடம்பிடித்த சில முக்கிய உரைகள்.

க.மு.தர்மராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: க.மு.தர்மராசா (கமுதர்), இல.2, ஹாமர்ஸ் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). iv, 72 பக்கம், புகைப்படங்கள்,