திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2014. (யாழ்ப்பாணம்: றூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை).
24 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×15 சமீ.
சுருக்கமாகவும் அதே வேளை விரிந்த பொருள் விளக்கமாகவும் மனித நீதி நெறி, மனித விழுமியப் பண்புகள், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நற்பழக்கங்கள் ஆகியவற்றை மானுட வாழ்வுக்காக வழிகாட்டுவதுடன் மானிட ஒழுக்கவியலின் பெருமைகளையும் பயன்களையும் எடுத்துரைக்கும் ஒளவையின் மூதுரை-நல்வழி ஆகியன, சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி ஆசிரியர் திருச்செல்வம் தவரத்தினம் அவர்களால் இங்கு பொருள் விளக்கத்துடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.