மு.வரதராசன் (உரையாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்துமத அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
xviii, 278 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-9233-82-4.
திருக்குறளை இலகுவாக விளங்கிக்கொள்ளத்தக்க வகையிற் பதம் பிரித்து, பேராசிரியர் மு.வரதராசன் அவர்களது தெளிவுரையோடு வெளியிட்டுள்ளனர். அறத்துப்பால் என்ற பிரிவில் பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்பனவும், பொருட்பால் என்ற பிரிவில் அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் ஆகிய பிரிவுகளும், இன்பத்துப்பால் என்ற பிரிவில் களவியல், கற்பியல்ஆகிய பிரிவுகளும் தேர்ந்து தரப்பட்டுள்ளன.