13098 கடந்த நூற்றாண்டில் இலங்கையில் இந்துமதம், பௌத்த மதங்களில் ஏற்பட்ட கருத்தியல் வளர்ச்சி.

நா.ஞானகுமாரன். யாழ்ப்பாணம்: சேர் பொன் இராமநாதன் நினைவுக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).

iv, 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறை பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் அவர்கள் 12.01.2014 அன்று நிகழ்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 29ஆவது பட்டமளிப்பின் பின்னர் கைலாசபதி கலையரங்கில் நிகழ்த்திய சேர் பொன் இராமநாதன் நினைவுப் பேருரையின் (2014) நூல்வடிவம் இதுவாகும். இவ்வாய்வு 1900 முதல் 2000 வரையிலான காலப்பகுதியினை உள்ளடக்குகின்றது. இந்து மதம் என்ற பதம் இங்கு சைவ சித்தாந்தத்தினையும் இந்து சமயத்தில் குறிப்பிட்ட செல்வாக்கினைப் பெற்ற வேதாந்தத்தினையும் நோக்குவதாக அமைகின்றது. இங்கு இந்துக்கள் பற்றிய ஆய்வில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மைய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்திற்கு அப்பாற்பட்ட எல்லையானது மட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளதுடன் பௌத்தம் பற்றிய கருத்தியலும் பொதுமை நோக்கில் எடுத்தாளப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

12332 – பெற்றோர் அறிய வேண்டியவையும் மாணவர் பிரச்சனைகளும்.

சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி. கனடா: சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி, டொரன்ரோ, 1வது பதிப்பு, 2008. (கனடா: Fine Copy Printing, Toronto). ii (12), 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ. புலம்பெயர்ந்த நாடுகளில்