நிர்வாக சபையினர். தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், துர்க்காபுரம், 1வது பதிப்பு, 2004. (சுன்னாகம்; திருமகள் அழுத்தகம்).
20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.
துர்க்காபுரம்-தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் ஆதரவில் இயங்கும் துர்க்காபுரம் மகளிர் இல்லம் 03.02.1982இல் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமியர் இணைந்து வளர்ந்து வேலைவாய்ப்பு, திருமணம் போன்ற காரணங்களால் வெளியேறியிருக்கிறார்கள். ஆதரவற்ற சிறுமியரைப் பராமரித்து சமூகத்திற்கு மீளவழங்கும் இவ்வரிய பணியை கோவில் நிதியில் மேற்கொண்டு முழுச் சைவ உலகிற்குமே முன்மாதிரியாக அமைந்திருக்கும் இச்சமூக நல அமைப்பின் பின்னணியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி இருந்துள்ளார். இம்மகளிர் இல்லத்தின் 2003ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையும் வரவுசெலவு அறிக்கையும் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 775/24632).