13208 கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணம்: தக்ஷகாண்டம் அடிமுடி தேடு படலம்.

கச்சியப்ப சிவாசாரியார் (மூலம்), சி.கணபதிப்பிள்ளை (உரையாசிரியர்). இலங்கை பிரதேச அபிவிருத்தி இந்து சமயத் தமிழ் அலுவல் அமைச்சு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்).

(2), 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×15 சமீ.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானைப் போன்றே நைட்டிக பிரமச்சாரியாக வாழ்ந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய கந்தபுராணம் தக்ஷகாண்ட உரைக்கு இலங்கை சாகித்திய மண்டலம் பரிசில் வழங்கி கௌரவித்ததோடு, அவரை சாகித்திய மண்டலத்தின் உறுப்பினராயும் இணைத்துக் கொண்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3001).

ஏனைய பதிவுகள்

9033 மனம் ஒரு புதிர்: வில்லங்கமும் விளக்கமும்.

தி.கணேஸ்வரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2002. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). 80 பக்கம், சித்திரங்கள்,

16198 மின்னும் தாரகைகள் : இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு.

நூருல் அயின் நஜ்முல் ஹீசைன். பத்தரமுல்லை: சல்மா பதிப்பகம், ‘சிமாக் மஹால்”, இல. 3, ரிச்சார்ட் டீ சொய்சா ஊடகவியலாளர் வீடமைப்புத் திட்டம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4),