13242 நவராத்திரிப் பாமாலை.

திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: ஆரணன் பிறின்ரேர்ஸ், மருதனார் மடம்).

(v), 23 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 18×12 சமீ.

நவராத்திரி என்னும் சொல்லுக்கு ஒன்பது நாட்களில் செய்யப்பெறும் நோன்பு அல்லது உற்சவம் என்று பொருள். உற்சவம் முடியும் பத்தாம் நாளையும் கணக்கெடுத்து வடநாட்டினர் அதை தசரா என வழங்குவர். புரட்டாதி மாதத்துப் பூர்வபக்க பிரதமைத் திதி முதலாக உள்ள ஒன்பது இரவுகள் நவராத்திரி எனவும் பத்தாம் நாள் விஜயதசமி எனவும்படும். இந்துக்கள் அனைவரும் இப்பூஜையை சிறப்பாகச் செய்து வருகின்றனர். கிருதயுகத்திலே பக்தியிற் சிறந்த சுகேதன் என்ற அரசன் தனது  இராச்சியத்தை இழந்து மனைவியோடு வனவாசம் சென்றபோது அங்கிரசன் என்னும் இருடி நவராத்திரி பூஜையின் மகிமையையும் அதன் வழிபாட்டு முறையையும் உபதேசித்ததாகக் கதையுண்டு. அவ்வரசன் அவ்வாறே நவராத்திரி பூசையைப் பக்தியோடு செய்து தனது  இராச்சியத்தை மீளவும் பெற்று வாழ்ந்ததாக புராணக்கதை கூறுகின்றது. அதன் காரணமாக பின்னாளில் அக்காலத்தில் துர்க்கை, இலக்குமி, சரசுவதி  இம் மூவரையும் முறையே ஒவ்வொருவருக்கும் மூன்று தினமாக ஒன்பது நாளும் பூசித்து வருவதுண்டு. தாய்க்கும் பிள்ளைக்குமான இணக்கமாக உருவகித்து பாடப்பெற்ற பக்கி இலக்கியமான நவராத்திரி பாமாலை அந்நாட்களில் பாடப்பெறுவதுண்டு. இந்நூல் அப்பாமாலையை உள்ளடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்

13586 புத்திமான்: சிறுவர் நாடகம்.

யோ.யோண்சன் ராஜ்குமார். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 16 பக்கம்,

ten Put On-line casino Us

Content Lowest Put Gambling enterprises For the Cellular Applications Do The brand new step 1 Deposit Extra Supply the Opportunity to Victory Actual Money? Make

12495 – மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி: நாற்பதாண்டு நிறைவுச் சிறப்பு மலர் 1959-1999.

எஸ்.யூ. சந்திரகுமாரன் (மலராசிரியர்). மன்னார்: சித்தி விநாயகர் இந்தக் கல்லூரி, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). 172 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21

17557 நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்.

ஆதன் குணா (இயற்பெயர்: ந.குணசிவரூபன்). மட்டக்களப்பு: ந.குணசிவரூபன், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, 2025. (மட்டக்களப்பு: காந்தள் அச்சகம், புதுக்குடியிருப்பு). 104 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 19.5×12 சமீ., ISBN: 978-624-94438-0-8. இத்தொகுப்பில்;