செ.தவநாயகம், சி.ரகுலேந்திரன்(இதழாசிரியர்கள்). திருக்கோணமலை: உள்ளூராட்சித் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, மார்ச் 2005. (திருக்கோணமலை: மாகாண பதிப்பகம், வடக்கு கிழக்கு மாகாணம், திருக்கோணமலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்).
iஒ, 80 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 25.5×18.5 சமீ.
2004 ஜுலை 14-20 திகதிகளில் இடம்பெற்ற உள்ளூராட்சி வாரக் கொண்டாட்டங்களின் இறுதிநாளில் (20.7.2004) வெளியிடப்பட்ட சிறப்புமலர். இம்மலரில் வட-கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள்: ஓர் ஆய்வுக் கண்ணோட்டம் (க.பரமேஸ்வரன்), இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவ ஜனநாயகமும் அதிகாரப் பரவலாக்கலும் (தெ.து.விஜயலட்சுமி), உள்ளூராட்சி நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதில் புவியியல் தகவல் ஒழுங்கின் பங்கு (ஏ.அன்ரனிராஜன்), சித்த ஆயுர்வேத மருத்துவத்தினை மேம்படுத்துவதற்கான சில ஆலோசனைகள் (க.சிவலிங்கம்), வட மாகாணத்தில் பொது நூலகங்கள் (ரோ.பரராஜசிங்கம்), இலங்கையில் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான பெண்களின் செயல்வாதம் (சித்திரலேகா மௌனகுரு), மனவெழுச்சி விருத்தியும் உளமூட்டக் குலைவும் (சபா ஜெயராஜா), மூலிகை பற்றிய விழிப்புணர்வு (நா.வர்ணகுலேந்திரன்) ஆகிய தமிழ் ஆக்கங்களும், வு.மு.தசநாயக்க, நந்தனி குணசேகரா ஆகியோர் எழுதிய உள்;ராட்சி தொடர்பான இரு சிங்கள ஆக்கங்களும், Decentralization and Devolution in Sri Lanka Administration and Political Dimension (எம்.நடராஜசுந்தரம்) என்ற ஆங்கில ஆக்கமும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13144).