வைஷ்ணவி பிரதீப்குமார்;. யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).
iv, 12 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ.
விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பீடைநாசினிகள் வெவ்வேறு முறைகளில் எமது உடலின் உட்சென்று பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. எனவே பீடை நாசினிகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமான விடயமாகும். இந்நூல் பீடைகொல்லித் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் சுகாதாரச் செய்திகளையும் வண்ணப்பட விளக்கங்களுடன் வழங்குகின்றது. பீடை நாசினிகளின் விபரப்பட்டியலும் முக்கியத்துவமும், பீடை நாசினிகளைச் சேமித்தல் மற்றும் கொண்டுசெல்லல், பீடை நாசினிகளின் கலவை தயாரித்தல், பீடை நாசினிகளின் பிரயோகம், பீடை நாசினியை தவறுதலாகச் சிந்துதல், பீடை நாசினி பாதிப்பிற்கான அறிகுறிகள், பீடை நாசினி பாதிப்பிற்கான முதல் உதவி ஆகிய எட்டு பிரிவுகளில் இந்நூல் விளக்கமளிக்கின்றது.