13792 சங்கிலியன் தரை: நாவல்.

மு.பொன்னம்பலம். கொழும்பு 6: புனைவகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 211 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0350-13-1.

இந்த நாவல் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றின் ஒரு வெட்டுமுகமாக அமைகின்றது. சேர்.பொன்னம்பலம் இராமநாதனில் இருந்து ஆரம்பமாகும் பிழையான அரசியல் பார்வை, நாவலரின் சமய, சாதிப் பார்வையோடு சங்கமித்து, இன்றுள்ள தமிழரசுக் கட்சியின் மிக மோசமான சந்தர்ப்பவாதமாகி காந்தியத்தையே துஷ்பிரயோகம் செய்து, மார்க்சியப் பேராசிரியர்களால் இன்னுமொரு நலமெடுப்புக்கு இரையாகி எல்லாம் இழந்த நிலையில் நமது விடுதலைப் போராட்டம் நிற்கின்றது. மற்றும் எல்லாக் கூறுகளும் ஓய்ந்துபோக இப்போது ஒரு பெருவெளியைக் கண்டடைந்துள்ளது. இந்த வெளி, செயல்திறனும், சிந்தனைத்திறனும் உடைய நேர்மையானவர்களால் பயன்படுத்தப்படுமாயின் அது எவரும் சுதந்திரமாக வாழக்கூடிய கூட்டுரிமையைத் தரும்.  இதுவே இந்நாவலின் குறிக்கோள் என்கிறார் ஆசிரியர். தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றின் ஒரு வெட்டுமுகத் தோற்றத்தை இந்நாவல் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60906).

ஏனைய பதிவுகள்

12517 – சர்வதேச வர்த்தகமும் ஒத்துழைப்பும்:

சர்வதேச அமைப்புக்கள். ஜெயராணி தியாகராஜா, வீரகுட்டி தியாகராஜா. கொழும்பு 13: கீதா பப்ளிகேஷன், 1வது பதிப்பு, தை 2001. (கொழும்பு: நிஷான் பிரின்டர்ஸ்). (6), 114 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 90., அளவு:

13338 இலங்கையை மீட்டெடுத்தல்: துரிதப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கான தொலைநோக்கும் உபாயமும்.

இலங்கை அரசாங்கம். இலங்கை: அரசாங்க வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). (9), 391 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.