ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: பிரசுரக் கமிட்டி, அரசாங்க ஊழியர் பௌத்த சங்கம், 53/3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 1997. (கொழும்பு 10: ANCL லேக் ஹவுஸ், டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை).
(10), 98+(9) + 18, (10), பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 62ஆம் ஆண்டாக அரசாங்க ஊழியர் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக மானிடம் தழுவிய மார்க்கம் (சி.தில்லைநாதன்), தமிழ் மகா காவியம் தரும் புத்தமத தத்துவங்கள்-மணிமேகலை (த.கனகரத்தினம்), பௌத்தம் ஒரு நோக்கு (முஹம்மட் யாகூப் யெஹியா), மீண்டும் பிறந்து வரவேண்டும் புத்த பகவானே (ஜின்னாஹ் ஷெரிபுத்தீன்) ஆகிய நான்கு படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16862).