11688 முறையீடு: கவிதைகள்.

கவிஞர் அபூபக்கர் (இயற்பெயர்: A.M.அபூபக்கர்). காத்தான்குடி 2: முனீரா பப்ளிக்கேஷன்ஸ், 86, பழைய வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1983. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில் வடக்கு).

62 பக்கம், தகடுகள், விலை: ரூபா 5., அளவு: 17.5×12.5 சமீ.

கவிதாஞ்சலி (1977), நான் (1980), நீ (1981), நம்பிக்கை மணிகள் (1982) ஆகிய கவிதைகளைத் தொடர்ந்து வெளிவரும் இக்கவிதைத் தொகுதியில் கவிஞர் அபூபக்கரின் நீண்ட கவிதைகள் இரண்டு உள்ளன. கவிஞரின் மத அனுபவத்தை வெளிக்கொணரும் கவிதைகளாகக் கருதப்படும் மதச்சார்புக் கவிதைகள் இவை. ‘அவர் தனது மதப்பாரம்பரியத்தினுள்ளே தனது உணர்ச்சி முழுமையைக் காண விரும்புகிறாரென்பதும், அந்த மத இலட்சிய நிறைவிலேயே தமது நிறைவினையும் காணவிழைகின்றார் என்பதும் (இக்கவிதைகளிலிருந்து) தெளிவாகின்றது’ என்று இந்நூலுக்கு விரிவான அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17242).

ஏனைய பதிவுகள்

Slot über Wilds & Multiplikatoren

Content Online Spielautomaten qua Echtgeld: Beste Slots & Casinos 2024: Casino Mega Joker Jackpot 🤞 Organisation bei Kasino Boni Fortgeschrittene Slot-Techniken Unser besten neuen Spielautomaten

10521 ஒரு யுகத்தின் சோகம்: கவிதைத் தொகுதி.

மன்னூரான் (இயற்பெயர்: எஸ்.எச்.எம்.ஷிஹார்). மன்னார்: எஸ்.எச்.எம்.ஷிஹார், மன்னார் எழுத்தாளர் சங்கம்,  653, காஷ்மீர் வீதி, உப்புக் குளம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (தல்கஸ்பிட்டிய: ஒக்ஸ்போர்ட் பிரின்டர்ஸ்). xxiv, 82 பக்கம், புகைப்படங்கள், விலை: