11715 விபுலானந்தர் மீட்சிப் பத்து.

புலவர்மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை. (மூலம், பொழிப்புரை, உரை), எப்.எக்ஸ்.சி.நடராசா (குறிப்புரை). மட்டக்களப்பு: புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம், 127, மத்திய வீதி, 3வது பதிப்பு, வைகாசி 1990, 1வது பதிப்பு, 1950, 2வது பதிப்பு, 1960. (மட்டக்களப்பு: சென்.ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).

(6), 18 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 24×18 சமீ.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வேளையில் விபுலானந்த அடிகளார்; சன்னி வாத சுரத்தினால் பீடிக்கப்பட்டிருந்தார். அவ்வேளை அதிலிருந்து நீங்கிக் குணம் பெறுகவென்று பன்னிருசீர் ஆசிரியவிருத்தத்தில் புலவர்மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை பாடியதே இந்த மீட்சிப்பத்து. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14752).

ஏனைய பதிவுகள்