10161 சிவதி புராணம்.

க.வீரகத்தி. யாழ்ப்பாணம்: கு.ராஜரட்ணம், சயன்ஸ் சென்டர் சிறப்பு வெளியீடு, 2வது பதிப்பு, ஏப்ரல் 1995, 1வது பதிப்பு, மார்ச் 1985. (பருத்தித்துறை: விநாயகர் தருமநிதிய அச்சகம், புலோலி மேற்கு).

xi, 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் முதற்பதிப்புக் கண்ட சக்தி வழிபாடு பற்றிய துதிநூல் நூறு வரிகளிலே அம்பிகை அடியார்களால் காளிதாஸர் எனவழங்கும் தமிழறிஞர் பண்டிதர் க.வீரகத்தி  அவரகளால் பத்தாண்டுகள் கழிந்த நிலையில் ஈழத்தில் மீள்பிரசுரம் கண்டுள்ளது. தன் ஆன்மாவை நிழற்பதிவு செய்து இந்நூலை ஆசிரியர் ஆக்கியிருக்கிறார். அன்னையின் அழகையும் பெருமையையும் ஆயிரம் திருநாமங்களில் பலவற்றைக் கூறி அவளை வழிபடும் இப்புராணம் சக்தி வழிபாடு செய்வோருக்கு அரியதொரு நூலாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14495).

ஏனைய பதிவுகள்