மு.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: இணுவில் சைவத் திருநெறிக் கழகம், சிவகாமி அம்பாள் தேவஸ்தானம், இணுவில், 1வது பதிப்பு, பங்குனி 2011. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்).
xi, 90 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.
மகாசக்தியின் மகிமையையும் பேரருளையும் வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட கதைகள். முகவுரை, பரிசித்து மன்னன் கேட்ட கதை, கண்ணனுக்காக நடந்த கதையமுது, கிருஷ்ணர் சியமந்தக மணியையும் ஜாம்பவதியையும் பெற்ற கதை, முருகன் சொன்ன கதை, தீயசிந்தனையுடைய மகனைத் திருத்துவதற்காக நடந்த கதை, ரேவதியின் கதை, நாராயணர் செய்த தேவியின் யாகம், திருமகளைப் பார்த்து திருமால் சிரித்த கதை, மதுகடைபரின் போர் வெறியும் வதமும், சத்திய விரதனின் கதை, துருவசித்துவின் கதை, நவராத்திரி பூசை முறையும் விரத மகிமையும், இராமர் நவராத்திரி விரதமிருந்த கதை, தேவ அசுரர் போராட்டம், தேவியைத் துதித்தல், மகிஷாசுரன் தோன்றிய கதையும் வதமும், சும்ப நிசும்ப அசுரர்கள் கதை, விருத்திராசுரன் கதை, இந்திரப் பதவியும் நகுஷனும், சதாஷிதேவியும் துன்முகாசுரனும், சக்தியை அறியாத சிரிப்பு, சதிதேவி தீய்ப்பாய்தலும் சக்திதேவியின் அங்கங்கள் தங்கிய தலங்களும், ஜோதிமயமாகத் தோன்றிய குமாரி, சாவித்திரிதேவியின் பூசையும் விரதப் பயன்களும், தேவேந்திரனுக்குத் துர்வாச முனிவர் இட்ட சாபம், பிராமரியம்மனின் மகிமை, அமரர்களின் அகந்தையை அடக்கிய யக்ஷன், பிராமணர்களின் பொறாமையும் கௌதம முனிவரின் சாபமும், சக்திகள் ஆகிய 30 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 218771).