ந.இரவீந்திரன். வவுனியா: விஞ்சு, இணை வெளியீடு, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, 2009. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக்கலையகம், இல.77, முதலாம் குறுக்குத்தெரு).
xiv, 169 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0192-00-7.
திருவள்ளுவர் காலத்திய கல்விச் சிந்தனைகளைத் திருக்குறள் கொண்டும் பிற நூல்களைக் கொண்டும் நிரல்பட ஆய்வுசெய்து விபரித்துள்ளார். கல்வியியல் தேடலில் தமிழரின் கருத்தியல் கோட்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன. சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், ரூசோ, பிரொபெல், ஜோன் டூயி ஆகிய அறிஞர்களின் கல்விச் சிந்தனைகளையும் ஒப்பிட்டுத் திருக்குறளின் கல்விச் சிந்தனைகள் அவற்றோடு பொருந்திவருமாற்றை நூலாசிரியர் தன் ஆய்வில் விளக்கியிருக்கின்றார். ஆய்வு முகம், அமைப்பும் உலகப் பார்வையும், கல்விச் சிந்தனைப் பின்புலம், கல்வி, சமூக மாற்றமும் கல்வியியலாளர்களும் கல்வியியல் செல்நெறியில் திருக்குறள், மதிப்பீடு, துணைநூற் பட்டியல் ஆகிய எட்டு பிரிவுகளின்கீழ் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.