10275 விருட்சமே வெளியே வா.

அ.நிஷாந்தன். மன்னார்: திருப்புமுனை, தோட்டவெளி, 1வது பதிப்பு, மே 2012. (வவனியா: ஜீ.எஸ்.அச்சகம், வைரவபுளியங்குளம்).

xiv, 93 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54484-0-6.

மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றிக்கூறி அவற்றுக்கான தீர்வினை முன்வைக்கும் வகையில் எழுதப்பட்ட 15 கட்டுரைகளின் தொகுப்பு. மாணவர்கள் எதற்காகக் கற்கவேண்டும், இலக்கு எதுவுமில்லாத மாணவர்கள் எங்கே செல்கின்றனர், அறிவுரைகளும் மாணவர்களின் நிலைப்பாடும், வகுப்பறை தாண்டிச்செல்லும் மாணவ மனதுகள், பாடசாலை வளாகத்தினுள் மாணவர்களின் உரையாடல், மாணவர்களின் சிரிப்பு என்னும் ஆயுதம், பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசமாக்கும் சில பெற்றோர், சில ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், மாணவர்களால் மாணவர்களுக்கெதிரான பிரச்சினைகள், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள், கணிதமும் ஆங்கிலமும், பாடசாலைக் காதல்களும் ஏமாற்றங்களும், மாணவத் தற்கொலைகள், அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியவை, எனது மாணவக்கால அனுபவங்கள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இன்றைய பாடசாலை மாணவர்களிடையே தன்நம்பிக்கையை உருவாக்கும் வகையில் இந்நூல் அறிவுரைகளை வழங்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 229696).     

ஏனைய பதிவுகள்

15880 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா.

ம.முஹம்மது உவைஸ் (மூலம்), பீ.மு.அஜ்மல் கான் (பதிப்பாசிரியர்). மதுரை 625001: சர்வோதய இலக்கியப் பண்ணை, 32/1, மேல வெளி வீதி, 1வது பதிப்பு, மே 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 383 பக்கம்,