10530 கரை சேரும் கடிதங்கள்.

கவிதா விக்னேஸ்வரன். நோர்வே: கவிதா விக்னேஸ்வரன், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு 6: புதிய கார்த்திகேயன் அச்சகம்).

105 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×11.5 சமீ.

புலம்பெயர் சூழலில் நோர்வேயில் உருவாகிய ஒரு ஈழத்து இளம் கவிஞராகக் கவிதா அறிமுகமாகியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தின் குரும்பசிட்டியில் பிறந்து நோர்வேயில் வளர்ந்த இவ்விளம் பெண் கவிஞரின் கவிதைத்தொகுதி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 2002இல் வெளியிடப்பட்டது. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் பல இளம்பெண்களில் ஒருத்தியாய் தனக்குள் இருக்கும் ஏக்கங்களையும் விருப்பு-வெறுப்புகளையும் ஓய்வுநேரங்களில் எழுதிச் சேர்த்தவைகளை இந்நூலில் பதியம் வைத்துள்ளார். இந்நூலின் இரண்டாம் பதிப்பு  2006இல் ‘பனிப்படலத் தாமரை’ என்ற தலைப்பு மாற்றத்துடன் வெளிவந்துமுள்ளது. (முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 7515). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24193).

ஏனைய பதிவுகள்

14269 சமஷ்டி முறையும் சுயநிர்ணய உரிமையும்.

மாற்றுக் கல்வி நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கல்வி நிலையம், சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெரஸ், 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2006, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (ஹோமகம: கருணாரத்ன அன்ட்

14947 மகுடம்: கலைஞர் கே.மோகன்குமார் பற்றிய ஓர் ஆவணப்பதிவு.

எம்.ஜெயகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 12: கிருஷ்ண கலாலயம், ஜீ 1/6, சாஞ்சி ஆராச்சித் தோட்டம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (கொழும்பு: பிருந்தா எண்டர்பிரைசஸ்). ஒஒiஎ, 122 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500.,