10590 நிலவைத் தேடும் வானம்.

வன்னியூர் செந்தூரன் (இயற்பெயர்: சுந்தரமூர்த்தி செந்தூரன்).  வந்தாறுமூலை: வன்னியூர் செந்தூரன், செந்தணல் வெளியீடு, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜனவரி 2013. (வவுனியா: தீபன் அச்சகம், யாழ். வீதி).

60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 240., அளவு: 19.5×14.5 சமீ.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானத்துறை மாணவனான செந்தூரனின் புதுக் கவிதைத் தொகுப்பு. நாம் பட்ட துன்ப வடுக்களையும் சமூக அவலங்களையும் சில காதல் நினைவுகளையும் இக்கவிதைகள் சொல்கின்றன. யுத்தம் சார்ந்த கவிதைகள், யுத்தத்தின் மேல் வெறுப்பை ஊட்டுவனவாக அமைந்துள்ளன. சொற்களும் சொல்லிய விதங்களும் பொருள்களும் சிறப்பாக அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

17184 மொழிதல்: ஆய்விதழ் தொகுதி 10: எண் 1.

 வ.இன்பமோகன் (பிரதம ஆசிரியர்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 29/1 A, ஞானசூரியம் சதுக்கம், 2ஆம் குறுக்குத்தெரு, 1வது பதிப்பு, ஆனி 2023. (சென்னை 000116: ஆதவன் ஆர்ட் பிரன்ட், போரூர்). iii, 124

13954 மாக்சிசப் பார்வையில் இலங்கைச் சரித்திரம்.

நா.சண்முகதாசன். யாழ்ப்பாணம்: நா. சண்முகதாசன், 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண அச்சகம், 93, ஸ்ரான்லி வீதி). 128 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 20.5×13.5 சமீ. நா.சண்முகதாசன் என அழைக்கப்படும் நாகலிங்கம்