10730 அலைக்குமிழ்: நாவல்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, மார்கழி 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

178 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8715-58-1.

அலைக்குமிழ் நிறைவேறாத ஒரு காதலைக் கதையாக்கித் தருகின்றது. நாவலின் கதைக்களம் வன்னிப்பிரதேசமாக அமைகின்றது ஓமந்தை, கிளிநொச்சி ஆகிய இரு இடங்களிலும் கதை நிகழ்வதாகச் சித்திரிக்கப்படுகின்றது. அலைக்குமிழ் காதலர் சந்திரா-மோகன் இருவரது காதலும் இறுதியில் நிறைவேறாமைக்கு வித்தியாசமானதொரு காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ளது. சந்திரா-மோகன் காதல் தொடங்கி நடந்து வந்து, முடிவில் சந்திரா தன்னுடைய தங்கை என மோகன் அறியுமிடத்தில் நிறைவேறாது போய்விடுகின்றது. தன் சினேகிதனான சேகரின் ஓமந்தை வீட்டுக்கு வந்தது முதல் அவன் தங்கை சந்திராவைக் கண்டு காதலித்தது வரை நாவலின் முற்பாதியும், சந்திரா எவ்வாறு மோகனின் தங்கையானாள் என்பதை நாவலின் பிற்பாதியும் கூறுகின்றன. எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினரின் 63ஆவது பிரியா பிரசுரம் இது.

ஏனைய பதிவுகள்

12449 – அகில இலங்கைத் தமிழ்த் தின விழா: மட்டக்களப்பு, 1970.

மலர்க் குழு. மட்டக்களப்பு: கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1970. (மட்டக்களப்பு: சென். செபஸ்தியன் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்). 28 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.

11147 திருத்தொண்டர் புராணம்: திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணம்: மூலமும் உரையும்.

தமிழவேள் (இயற்பெயர்: க.இ.கந்தசாமி). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1970. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201 டாம் வீதி). (2), 118