10951 அபிமன்யு பதில்கள்: கேள்வி பதில்களின் தொகுப்பு.

அபிமன்யு (இயற்பெயர்: அ.சிவபாதசுந்தரம்). யாழ்ப்பாணம்: ஈழமக்கள் செய்தித் தொடர்பு நிலையம், 294, கண்டி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xxiv, 191 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

மே 2007 முதல் பெப்ரவரி 2013 வரை இலங்கையின் அரசியல் தொடர்பாகவும், குறிப்பாக ஈழ விடுதலைப் போராட்ட அரசியல் பற்றியதாகவும், ‘பத்மநாபா -ஈ.பீ.ஆர்.எல்.எப்.’ அமைப்பின்  சார்பான ‘கண்ணோட்டம்’ பத்திரிகையில் அவ்வமைப்பின்  தலைமைக்குழு உறுப்பினரான ‘தம்பா’ அவர்களின் வேண்டுகோளின்பேரில் கண்ணோட்டம் வாசகர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வழங்கப்பட்ட ஒரு மாற்றுக்கருத்தாளரின் விமர்சனபூர்வமான பதிலாக இவை அமைகின்றன. புலிகள் விமானத் தாக்குதல்கள் பற்றிய கருத்தென்ன? என்ற முதலாவது கேள்வியிலிருந்து இரா.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு வரை 97 கேள்விகளுக்கான விரிவான பதில்களாக இச்சுருக்கக் கட்டுரைகள் அமைகின்றன. இடையில் கிரிக்கெட், தமிழ் சினிமா, தமிழக அரசியல் எனச் சில கேள்விகளுக்கும் பதில் வழங்கப்பட்டுள்ளன. அ.சிவபாதசுந்தரம், 1970களிலிருந்து தமிழரசுக்கட்சித் தலைவர் கதிரவேற்பிள்ளை, தமிழகத்தின் இரா.ஜனார்த்தனம், ஈரோஸ் இயக்க ஸ்தாபகர் தோழர் ரட்ணசபாபதி, தோழர் பத்மநாபா, தோழர் கேதீஸ், தோழர் சுபத்திரன் போன்றவர்களுடன் நேரடியாகப் பழகி நன்கு பரிச்சயமானவர். லண்டனில் Tamil Action Group அமைப்பின் தாபகர் அமரர் மகரசிங்கம், மற்றும் மகேந்திரன், ஆஷ்பெரி, இராமநாதன், சிவலிங்கம், கருணாநிதி, கருணாகரன் குலசேகரம், புஷ்பானந்தன் ஆகியோருடன் இணைந்து ஈழத்தமிழர் கழகம் என்ற (Eelam Tamils Association ETA) அமைப்பை உருவாக்கிச் செயற்பட்டவர்.

ஏனைய பதிவுகள்