இராசேந்திரம் ஸ்ரலீன். யாழ்ப்பாணம்: அருள்தந்தை இராசேந்திரம் ஸ்ரலீன், அகவொளி வெளியீடு, நல்லாயன் நிலையம், வளாக வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.கிறாப்பிக்ஸ்).
xxii, 420 பக்கம், விலை: ரூபா 500.00, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-1949-07-5.
உள ஆற்றுப்படுத்தல் திறன்கள், தொடர்பாடல் திறன்கள், பிரச்சினை தீர்த்தல் திறன்கள் தொடர்பாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. திறன்களுக்கான பகுதியில் வரைவிலக்கணமும் விளக்கமும், திறனின் வடிவங்கள், செய்முறை, கடைப்பிடிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்பவைபற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உள ஆற்றுப்படுத்தல் திறன்களில் சிறந்தவர்களெனக் கருதப்படும் ஜெராட் ஈகன் (Gerard Egan), ரிச்சார்ட் நெல்சன் ஜோன்ஸ் (Richard Nelson-Jones) ஆகியோரின் நூல்கள் உசாத்துணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அருள்தந்தை இராசேந்திரம் ஸ்ரலீன், வழிகாட்டலும் உள ஆற்றுப்படுத்தலும் என்னும் துறையில் M.Sc பட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் டீ லாசால் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டவர்.