14587 என்னத்தை எழுதி என்னத்தை கிழிக்க.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், ஊசநயணந னுபைவையடஇ 14, அத்தபத்து டெரஸ்). vi, 70 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5222-03-2. காரைக்கவி கந்தையா பத்மானந்தன் காரைநகர் மண்ணின் கல்வித்துறை ஆளுமைகளில் ஒருவர். அவர் எழுதிய புதுக் கவிதைகளின் தொகுப்பு இது. மாதிரிக்கு ஒன்று: வேலியை விட்டு நட்டஃ கதியால் கொஞ்சம் விலகியதால் பக்கத்துஃ வீட்டுக்காரனுடன் வந்தஃ வேலிச் சண்டை வில்லங்கத்தைஃ முறையிடக் கோவிலுக்குப் போனால்ஃ அம்மன் வழக்கு விசாரணைக்காக/ கோட்சுக்குப் போய்விட்டதாக/ ஐயர் குறைபட்டுக் கொண்டார். விஞ்ஞானப் பட்டதாரியான கந்தையா பத்மானந்தன், முதுநிலைக் கற்கையினையும், தொழில்வாண்மைக் கல்வியினையும் பல்வேறு நாடுகளிலும் பெற்றிருந்தவர். இலக்கியத்துறையில் கவிதை, கட்டுரை என ஈடுபாட்டுடன் எழுதி வருபவர்.

ஏனைய பதிவுகள்

Exclusive Casino Online Offers Await

Content List Of Best Low Deposit Casino Sites: have a glimpse at the link Verantwortungsvoll Spielen Im Online Casino Ohne Einzahlung Mit Bonus Summary 3

12881 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 18/19 (2005/2006).

சர்ப்பா அருளானந்தம், தியாகராசா தனம் (இதழ் ஆசிரியர்கள்), யு.அந்தனிராஜன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை