14589 எனது மகள் கேள்வி கேட்பவள்.

கற்பகம் யசோதர (இயற்பெயர்: பிரதீபா கனகாதில்லைநாதன்). சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). 102 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-1-7752392- 8-4. (நூலின் உட்புறத்தில் ISBN: 978-1-7752392-7-7 என்று பதிவாகியுள்ளது). அரசாங்கங்கள் தமது ஒற்றைத் தன்மையுடைய வழிமுறைகளை தமக்கான அதிகாரங்களை தக்கமைத்த நாட்டில், தான் வாழ்ந்த-எதிர்கொள்கின்ற பல்வேறு அரசியல் சிக்கல்களையும், அதிகார சமமின்மைகளையும், வன்முறைகளையும், சனநாயக மீறல்களையும், அதிகாரத்திற்கு எதிராக நின்று பேசுகின்ற கவிதைகள் கற்பகம் யசோதரவினுடையவை. ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் அரசியலைஅவர்கள் எதிர்கொண்ட கீழைத்தேய வன்முறைகளை மேலைத்தேய அரசின் வன்முறையுடன் ஒப்பிடுவதினூடாக-சிறுபான்மையினராய் எங்கும் இணைந்துவிடாத அசமத்துவத்தின் பயங்களையும் அதன் அரசியலையும் இவை பேசுகின்றன. “எனது மகள் கேள்வி கேட்பவள்” வளர்ந்து கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களுடன் முரண்படப் போகின்ற மகள்களை எதிர்வுகூறுவது. சமத்துவமற்ற இந்த வாழ்வில்- முரண், இயல்பு. ஆதலால் முரண்படவும் தங்கிப் போதலன்றி ஒப்புவித்தலன்றி அநீதிக்கெதிராய் கேள்வி கேட்கவும் ஒன்றிணையவும் வேண்டிநிற்கின்றன இக் கவிதைகள். வன்னிப் பிரதேசத்தின் மல்லாவியில் 1980களில் பிறந்தவர் பிரதீபா கனகா-தில்லைநாதன். இவரது தந்தையார் கே. தில்லைநாதன் ஒரு விடுதலைப் போராளியாவார். சில காலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். 1990இல் போராளிகளின் முடிவுக்கிணங்க பதவியைத் துறந்து வெளியேறியவர். கற்பகம் யசோதர தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவருகிறார்.

ஏனைய பதிவுகள்

Best No-deposit Harbors 2023

Blogs Slotty Ports Local casino All of the Harbors Gambling establishment 100 percent free Revolves Added bonus! Greatest United kingdom Gambling enterprises Providing fifty Free