14357 ஆழிவித்து.

சுகுணலதா தவராஜா (இதழாசிரியர்). மட்டக்களப்பு: ஆனைப்பந்தி இந்துமகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (மட்டக்களப்பு: ஷெரோணி பிரிண்டர்ஸ், கூழாவடி). ஒi, 59 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ. மட்டக்களப்பு-புளியந்தீவில், ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஈராண்டுக்கு ஒருமுறை மலரும் ஆண்டு மலராக மூன்றாவது இதழாக ஆசிரியர், அதிதிகள், பெரியோர்கள், மணவரகள் எனப் பல்திறத்தாரின் ஆக்கங்களுடன் ‘ஆழிவித்து” 04.12.2014 அன்று மலர்ந்துள்ளது. இதழ்க் குழுவினராக திருமதிகள் த.உதயகுமார், சோ.சுந்தரம், சு.தவராஜா, க.பரமானந்தம், வி.தங்கவேல், அ.திருக்கணேஷ் ஆகியோரும் திருவாளர்களான த.அருணகிரிநாதன், இ.வரதராஜா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இம்மலரில் பாடசாலை ஆளணி, பாடசாலை வரலாற்றில் ஒரு நோக்கு, கல்வி, அன்பிற்கும் அர்த்தம், குரு, பாடசாலையின் கடைசிநாள், கண்டுபிடிப்புக்கள், யுத்தத்தின் சாரல், மலர்ந்து வாடிய மலர்க்கொத்து, அனைவரும் வாருங்கள், தாயும் சேயும், மனிதன் மனிதனாக வாழ, வாலி வதம்-கொலையா?, எழில் கொஞ்சும் சிகிரியா, மாணவமணிகளே, நன்றின்பால் உய்வதறிவு, மழைத்துளி, கல்வியின் ஒளிதீபங்கள், பிள்ளைகளின் அபிவிருத்தியிலே, போர், ஒழுக்கம், வெற்றியால் விண்ணைத் தொடுவோம், நாட்டார் இசையும் வாழ்வியலும், அறிவின் விளைநிலமே, விஞ்ஞானத்தின் விந்தை, நம்பர் வண், பெற்றோர், எமது ஆசான், மூலிகைத் தாவரங்கள், பெற்ற மனம் பித்து, தாய், பொதுக் கல்வியிலஉடற்கல்வி, இணையமும் மனித நடத்தையும், சாதனை, புதுப்பொலிவு, இலங்கையில்அரசியற் பரிணாமம் ஒரு நோக்கு, வெற்றியின் படிகளில், நாவினிக்க நன்றிகள் ஆகிய 38 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14845 தமிழ்மறைக் கட்டுரைகள்.

கா.பொ.இரத்தினம் (பதிப்பாசிரியர்). சென்னை 04: இன்ப நிலையம், மயிலாப்பூர், 1வது பதிப்பு, மே 1959. (சென்னை 14: மாருதி பிரஸ், 83, பீட்டர்ஸ் ரோடு). viii, 9-244 பக்கம், விலை: இந்திய ரூபா 3.50,