சி.இதயராசன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xii, 48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0958- 02-3. சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் என இலக்கியத்தின் பல்வகைகளிலும் தன் ஆளுமையைப் பதித்து வருபவர் இதயராசன். இந்தக் கவிதைத் தொகுப்பின் ஊடாக, எமது சமூகத்தின்-மக்களின் இடர்கள், வாழ்வியல் முறைகள் என்பன வற்றை தனக்கேயுரிய கவிதை மொழியில் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். மட்டுவில் வடக்கைச் சேர்ந்த இவர், தன் தந்தையைப் பின்பற்றி, ஆரம்பகால இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். 1964இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மொஸ்கோ-சீன சார்புநிலைகளில் இரண்டாகப் பிரிந்தபோது, தந்தையார் மொஸ்கோ சார்பாகவும், இவர் சீன சார்பாகவும் இயங்கினர். ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியாகவும் சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ள நூலாசிரியரின் மணி விழாவையொட்டி ஜீவநதி வெளியீட்டகத்தின் 87ஆவது பிரசுரமாக இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.
Betmgm Sportsbook Opinion
Posts Skybet football odds – What is the Very Representative Betway Sporting events Uganda: Best place To possess Gaming They apply state-of-the-art skybet football odds