14714 மனுஷ்யா.

முகில்வண்ணன். (இயற்பெயர்: வேலுப்பிள்ளை சண்முகநாதன்). கல்முனை: கண்மணி பிரசுரம், நெசவுநிலைய வீதி, பாண்டிருப்பு-01, 1வது பதிப்பு, மார்கழி 2017. (தெகிவளை: ஏ.ஜே.பதிப்பகம்). x, 11-108 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-38729- 2-0. இது பாண்டிருப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொறியியலாளரான முகில்வண்ணன் எழுதிய பன்னிரு சிறுகதைகளின் தொகுப்பாகும். இதில் தமிழ்- சிங்கள கதாபாத்திரங்கள் உலாவும் கதைகளான மனுஷ்யா, இன்பத்தைத் தேடி, கருணா, இறைவன் போட்ட முடிச்சு, எனக்கென்ன?, நங்கீ, நான் மலடியா?, ஏ டாக்சி, சித்திரை பிறந்தது, அப்பா இல்ல சார், மிஸ் மாலா, உயிர் இருக்கும் வரை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள “நங்கீ” சிறுகதையே ஆசிரியர் எழுதிய முதலாவது சிறுகதையாகும்.

ஏனைய பதிவுகள்

14959முத்திரையிற் பண்டிதமணி: முத்திரை வெளியீட்டு விழா மலர்.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை, உரும்பிராய், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (8), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19

14514 வட்டுக்கோட்டை அரங்க மரபு.

ச.தில்லை நடேசன். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2017. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 367 பக்கம், விலை: