14719 வந்தனா.

நீர்வை பொன்னையன். கொழும்பு 6: இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம், 18, 6/1, கொலிங்வுட் பிளேஸ், 1வது பதிப்பு, மார்ச் 2019. (கொழும்பு 6: R.S.T. என்டர்பிரைசஸ், 114, W.A.சில்வா மாவத்தை). 110 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1810-30-6. 1947இல் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய நீர்வை பொன்னையன், 1957இலிருந்து இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தவர். குறிப்பாக இவரது சிறுகதை இலக்கியங்களே இவரை இலக்கிய உலகில் முதலில் அறிமுகப்படுத்தின. 1957 முதல் 2019 வரை 122 சிறுகதைகளை எழுதியுள்ள இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி “மேடும் பள்ளமும்” என்ற பெயரில் 1961இல் வெளிவந்தது. “வந்தனா” என்ற இத்தொகுதிவரை இவர் 11 சிறுகதைத் தொகுதிகளை எமக்கு வழங்கியுள்ளார். இத்தொகுதியில் வீம்பு, மன்னிப்பு, வந்தனா, மனச்சரிவு, பசி, சொத்து, கண்ணகி, பிணைப்பு, சாயல், நிர்மூலம், தற்குறி, சோதினை, சவால், ஐயாயிரம் ஆகிய 14 கதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64869).

ஏனைய பதிவுகள்

12081 – நாகதம்பிரான் மான்மியம்.

த.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: த.சுப்பிரமணியம், பாக்கியவாசம், சித்தன்கேணி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1963. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்). 47 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12.5 சமீ. நாகர்களின் வரலாறு, நாக வழிபாட்டின் மகிமை,

Totally free Slots On line

Articles Local casino Orgs Current 100 percent free Games How to choose A knowledgeable Real cash On the web Position Video game Boost your Stakes

12602 – பௌதிக இரசாயனம்: பகுதி 1:வாயுக்களின் நடத்தைக் கோலங்கள்.

தம்பையா சத்தீஸ்வரன். யாழ்ப்பாணம்: திருமதி சுபாசினி சத்தீஸ்வரன், 108, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், 295ஃ7, காங்கேசன்துறை வீதி). (4), 74 பக்கம், விலை: ரூபா 60.,