12083 – பருத்தித்துறை ஸ்ரீ ராமகிருஷ;ண சாரதா சேவாச்சிரமம்: ஆண்டுமலர் 27.12.1991.

மலர் வெளியீட்டுக்குழு. பருத்தித்துறை: ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமம், 1வது பதிப்பு, டிசம்பர் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(80) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.

ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தில் கொண்டாடப்பெற்ற அன்னை சாரதாதேவி ஜயந்தியன்று இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதில் வழமையான ஆசிச் செய்திகள், அறிக்கைகளுடன், தூய அன்னை ஸ்ரீ சாரதாதேவி, ஸ்ரீராமகிருஷ்ண மகத்துவம், உண்மையான வழிபாடு, சேவை என் பார்வையில் (எம்.கே. முருகானந்தன்), ஸ்ரீமத் சுவாமி பிரேமாத்மானந்தாஜீ (சுவாமி சித்ரூபானந்தா), சுவாமி விவேகானந்தரின் கல்விச் சிந்தனைகள், பிரிவு உபசார உரை, விவேகானந்தரின் உள்ளம் (சுவாமி அஜராத்மானந்தா), விபுலானந்த அடிகளாரின் தேசியக் கல்வி முறை (சுவாமி நடராஜானந்தா), ஸ்ரீ சாரதா சேவாச்சிரமம்- பொலிகண்டி கந்தவனக் கிளை, புதிய தலைவர் சுவாமிகளுக்கு ஸ்ரீ சாரதா தேவி சேவாச்சிரம வரவேற்பும் அறிக்கையும் (சுவாமி சித்ரூபானந்தா) ஆகிய தமிழ் ஆக்கங்களும், Some Revelations of the Divinity of the Holy Mother Courtesy-Vedanta Kesari, Moulding our lives in Sri Ramakrishna’s Teachings – Swami Bhuteshananda, Swami’s Contribution to Vedantic Thoughts-Swami Tapasyananda போன்ற சில ஆங்கில ஆக்கங்களும் நிறுவன அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14609).

ஏனைய பதிவுகள்