மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம்).
99 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-41614-3-6.
ஒரு மின்சாரப் பெறியியலாளரான ஆசிரியர் சக்தி சேமிப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை ஆக்கியுள்ளார். சக்தி வளங்களை அளவோடு பாவித்து நாம் அனுபவிக்கும் வளங்களை எங்கள் இளைய தலைமுறையினருக்கும் வழங்குதல் அவசியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அப்பொறுப்பு பாவனையாளரான மக்களின் கைகளிலும் தான்உள்ளதென்பதை வலியுறுத்தி இந்நூலை எழுதியுள்ளார். மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் மின்சாரம் தொடர்பான அறிவூட்டல் தரக்கூடிய பல விடயங்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. அன்றாட வாழ்வில் மின்சாரம், இலங்கையிலே மின்பிறப்பாக்கம், வீட்டிற்கு வரும் மின்சாரம், வீடுகளில் மின்சக்தி விரயமாதலை குறைப்போம், நிகர அளவிடல் முறை, பாதுகாப்பு ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் விரிவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.