10526 கடற்கரைப் பூவரசு: கவிதைக் கதம்பம்.

ஆரணி (இயற்பெயர்: அம்பலவாணர் சிவபாலசுந்தரன்). வவுனியா: தமிழ்க்குடில் வெளியீடு, குருமன்காடு, 1வது பதிப்பு, ஐப்பசி 2011. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).

52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 19.5×13.5 சமீ.

நம் தமிழ் போற்று என்ற கவிதையில் தொடங்கி அழகிய உலகம் என்ற கவிதை ஈறாக 29 கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுதி இது. யாழ்ப்பாணம், தீவகத்தில், சுருவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் சிவபாலசுந்தரன், பாடசாலைக் காலம் முதல் கவிதைத் துறையில் ஈடுபாடுகொண்ட இவர் புவியியல் சிறப்புக்கலைமாணிப் பட்டம் பெற்றவர். இலங்கை நிர்வாகசேவை  முதலாம் தர அதிகாரியாக செட்டிக்குளத்திலும், பின்னர் பிரதேச செயலாளராக வவுனியாவிலும் பணியாற்றியவர். இக்கவிதைத் தொகுதியில் கவிஞர் தாளங்களுடாக பாடல்களை இயற்றியுள்ளார். மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டின் கலவையாக இக்கன்னிப்படைப்பு வெளிவந்திருக்கிறது. சமூகத்தில் புரையோடிப்போயுள்ள தீய பழக்கங்கள், நேர்மையீனம், சமூக ஊழல் போன்ற அநீதிகளைக் கண்டு குமுறும் கவிதைகள் இவை.

ஏனைய பதிவுகள்

12205 – சமூகக் கல்வியும் வரலாறும்: 11ஆம் தரம்.

ஆசிரியர் குழு. கொழும்பு: தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). viii, 177 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

10088 வேத பாரம்பரியமும் சைவ சித்தாந்தமும்.

கலைவாணி இராமநாதன். யாழ்ப்பாணம்: திருமதி கலைவாணி இராமநாதன், கனகதாரா, தாவடி, கொக்குவில், 1வது பதிப்பு, மார்ச் 1992. (மதுரை 16: ஸ்ரீரெங்கா பிரிண்டர்ஸ், எஸ்.எஸ்.காலனி). (14), 162 பக்கம், விலை: இந்திய ரூபா ரூபா

15100 சைவ நெறி: தரம் 1.

பூ.சுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்). இலங்கை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாயா, பத்தரமுல்லை, 3ஆவது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, 1997, 2வது பதிப்பு, 1998. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 529/19, கே.சிறில் சி.பெரேரா