ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). காத்தான்குடி: கே.எம்.எம்.ஷெரீப், 27, லேக் டிரைவ், 1வது பதிப்பு, ஜுன் 1987. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).
(6), 133 பக்கம், விலை: ரூபா 23., அளவு: 23×14 சமீ.
அப்பாவியான கல்வியறிவற்ற ஓர் இஸ்லாமிய ஏழைப்பெண் சுரண்டல்வாத சமுதாயத்தினால் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகிறாள் என்பதை உட்கருவாகக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டுள்ளது. கதை இடம்பெற்றதாகக் கருதப்படும் காலங்களி;ல் இஸ்லாமிய சமூகத்தில் புரையோடிப் போயிருந்த சீதனக் கொடுமைக்கு ஆளாகி எத்தகைய இடர்களுக்கெல்லாம் அந்த ஏழை யுவதி ஆளாகிறாள் என்பது யதார்த்தமாகக் காட்டப்படுகிறது. இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் நாடகமாகவும், பத்திரிகையொன்றில் சிறுகதையாகவும் வெளிவந்த நுலாசிரியரின் ‘ஆயிரம் ரூபாய்’ என்ற சிறுகதையே பின்னர் ‘காட்டில் எறித்த நிலா’ என்ற தலைப்பில் விரிவாக்கப்பட்டு நாவலாக வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையின் நிதியுதவியுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.