10746 காதலும் வேட்கையும் (நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (சென்னை: சிவம்ஸ்).

192 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 18×12 சமீ.

இந்நாவலில் காதல் உணர்ச்சி, காம வேட்கை என்னும் இரண்டையும் பற்றிக் கற்றறிந்த தாமரை, காதல் உணர்ச்சி உந்தலில் காதலிப்பதாக வரும் சிவசேகரனின் குடும்ப வாழ்வில் இணைவதற்கு முன்வருகிறாள். பெற்றோரின் பொருள்நிலை சார்ந்தமுடிவை ஏற்கிறாள். சிவசேகரனின் காதல் உணர்வுகள் அடங்கியதும், தாமரை பொருள் நிலையை மேம்படுத்த கல்வியை மீண்டும் தொடங்குகிறாள். தன் பொருள்நிலையை உறுதிப்படுத்தவும் உழைக்கிறாள். குரூரமான குடும்பச் சிக்கல்களை எதிர்கொள்கிறாள். எதிர்பாராத நிகழ்ச்சிகளை அவள் எதிர்கொள்ள நேர்கிறது.

ஏனைய பதிவுகள்

10613 புயல் மழைக்குப் பின்னான பொழுது.

த.ஜெயசீலன். யாழ்ப்பாணம்: அருணன் பதிப்பகம், நல்லூர், 1வது பதிப்பு, கார்த்திகை 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.,

9580 ஏணி: கவிதை ஓவியத் தொகுப்பு.

மானியூர் ரட்ணேஸ்வரன். யாழ்ப்பாணம்: நுண்கலை மன்றம், தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (யாழ்ப்பாணம்: ரெக்னோவோ அச்சகம்). iv, 72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.