மானியூர் ரட்ணேஸ்வரன். யாழ்ப்பாணம்: நுண்கலை மன்றம், தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (யாழ்ப்பாணம்: ரெக்னோவோ அச்சகம்).
iv, 72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.
மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கதிர்காமு ரட்ணேஸ்வரன். மானிப்பாய் மெமோரியல் கல்லூரியில் பயின்று அங்கேயே ஆசிரியப்பணியில் இணைந்தவர். பின்னாளில் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். கலை உலகில் கவிதை-ஓவியம் இரண்டுதுறைகளிலும் தான் கொண்ட திறமைகளைப் பயன்படுத்தி 37 தலைப்புகளில் இந்நூலை வழங்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 133133).