11053 நிழலின் பின்னே மனிதன்.

நா.முத்தையா. நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, டிசம்பர் 1982. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி நிலையம்).

(6), 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ.

ஆத்மஜோதி முத்தையா அவர்களின் ஆன்மீகக் கருத்துரைகளின் தொகுப்பு. நிழலும் மனிதனும், ஆணவ நிழல், பாலைவனத்தில் கண்ட நிழல், மயிரும் நகமும், தேங்காயின் தத்துவம், நிழலின் மயக்கம்,  நிழலாட்டம், சினிமா, பார்வை நிலைப்பு, வாலிபனின் காதல், பளிங்கு மண்டபம், ஆயிரம் தேங்காய் உடைத்தவரின் ஆணவம், கருவில் உள்ள குழந்தை, உபநிஷதத்தில் காணப்படும் உபதேசம், மனித வரலாறு, உடலும் நிழலும், அன்பும் அறமும், உயிருக்கும் இறைவனுக்குமுள்ள தொடர்பு, பகலும் இரவும், பாசி படர்ந்த குளம், மனம் போல வாழ்வு, உரு வெளித் தோற்றம், அக இருள், மாயையைப் பற்றிக் கபீரின் விளக்கம் ஆகிய தலைப்புகளில் இக்கருத்துரைகள் எழுதப்பட்டுள்ளன. இவை முன்னர் ஆத்மஜோதி இதழ்களில் பிரசுரமானவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21551).

ஏனைய பதிவுகள்

9758 செய்யுட் கோவை: க.பொ.த.உயர்தரம் தமிழ்.

த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1.14  டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஆவணி 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1.14  டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). v, 198 பக்கம், விலை: