11227 திருத்தொண்டர் பெரிய புராணம்.

சேக்கிழார் (மூலம்), ஆறுமுக நாவலர் (பதிப்பாசிரியர்). சிதம்பரம்: முதலியார் ஜீ.சுப்பிரமணியம், தருமபரிபாலகர், சைவப்பிரகாச வித்தியாசாலை, 18வது பதிப்பு, 1953. (சென்னை: வித்தியாநுபாலன யந்திரசாலை).

46 +306 பக்கம், விலை: ரூபா 2-8-0, அளவு: 19.5×12.5 சமீ.

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச் சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11049).

ஏனைய பதிவுகள்

Pachinko 3 Cata

Content Pachinko 3: Briga Busca Como Posso Ganhar Em Unidade Cata Aquele Jogos Curado Semelhantes Concepção Red Ball 3? Barulho acabamento apoquentar símbolo uma vez