முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல். மருதமுனை 3: எம்.எம்.மிஹ்ழார், ஆயிஷா வெளியீட்டகம், 520/1, மசூர் மௌலானா வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (மருதமுனை: அப்னா பிறின்டர்ஸ்).
xvii, 60 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-54169-4-8.
இலங்கையில் பிரதேச செயலகங்கள் 1992ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க அதிகாரங்களைக் கையளிக்கும் சட்டத்தின் மூலமும், 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் மூலமும் அதிகாரங்கள் பிரதேச மட்டத்திற்கு பரவலாக்கம் செய்யப்பட்டு பிரதேச செயலகங்களின் மூலம் பொதுமக்களுக்கான சேவைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நூல் அத்தகைய சேவைகள் பற்றி தமிழ் மக்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற நோக்குடன் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில், பிரதேச செயலக செயற்பாடுகளும் அவை தொடர்பான ஏற்பாடுகளும், பிரதேச செயலகத்திலுள்ள பிரிவுகளும் அவற்றின் நடவடிக்கைகளும், கிளை ரீதியாக பொதுமக்களுக்கான சேவைகள், பிறப்பு இறப்பு மற்றும் திருமணப் பதிவு, சமூக சேவை நடவடிக்கைகள், கணக்குக் கிளை, சமுர்த்தி நடவடிக்கைகள், காணிக்கிளை, திட்டமிடற் கிளை, ஏனைய நடவடிக்கைகள் (பாவனையாளர் பாதுகாப்பு, மத்தியஸ்த சபைகளுக்கு உதவுதல், தேர்தல்கள்), கிராம உத்தியோகத்தர்களின் முக்கிய கடமைகள் ஆகிய பதினொரு பிரதான பிரிவுகளின்கீழ் விபரங்கள் தரப்பட்டுள்ளன.