க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). அன்புமணி இரா.நாகலிங்கம், சக்தி சாந்தன், க.தங்கேஸ்வரி, பரதன் கந்தசாமி (பதிப்புத் தொகுப்பாசிரியர்கள்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு, வைகாசி 2000. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம், 1109 Bay Street, Toronto, Ontario, M5S 2B3).
Lii, 156 பக்கம், புகைப்படத் தகடுகள்;, விலை: கனேடிய டொலர் 15., அளவு: 21×14 சமீ.
வயற்களக் கவிகள், வேளாண்மை செய்கைப் பாடல்கள், ஊஞ்சற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், விழாக்கோலப் பாடல்கள், தனிப்பாடல்கள் ஆகிய ஆறு வகைப்பட்ட எழுதா இலக்கியங்களான 120 நாட்டார் பாடல்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஈழத்துப் பூராடனார் திரட்டித் தொகுத்துள்ள இந்நூலின் பதிப்புக் குழுவினராக அன்புமணி இரா.நாகலிங்கம், சக்தி சாந்தன், க.தங்கேஸ்வரி, பரதன் கந்தசாமி ஆகியோர் இயங்கியுள்ளனர். கனடிய மட்டக்களப்பு சமூகத்தின் ஆதரவிலும், மட்டக்களப்பு அன்பு வெளியீட்டு ஆதரவிலும் கனடிய ஜீவா பதிப்பகத்தின் நிழல் வெளியீடாக இப்பதிப்பு வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20433).