நடராசா இராமநாதன். முல்லைத்தீவு: பிரதேச செயலகம், புதுக்குடியிப்பு, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், 2ம் குறுக்குத்தெரு).
xiv, 91 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4247-10-9.
வெளியில் தெரியா பிம்பம், அன்புள்ள மக்களே, மழை, வெள்ளைப்பூனை, நஞ்சு, வலி, அழுத்தும் நிஜங்கள், காடு விளைஞ்சென்ன மச்சான், சபதம், குஞ்சியப்பு, இறுதிவரை, கிராமத்துப் பெரியம்மா வீடு, வேண்டுகை, சத்தியம் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் எழுதிய 14 சிறுகதைகளின் தொகுப்பு. உடையார்கட்டைச் சேர்ந்த கலாபூஷணம் நடராசா இராமநாதன், இயல் இசை நாடகம் என்ற முத்துறைகளிலும் முத்திரை பதித்தவர். அவரது ஐம்பதாண்டு இலக்கிய அறுவடையின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.