பரம் ஜி.ஞானேஸ்வரன். லண்டன்: நாழிகை, Pannews Limited, 123 Twyford Road, Harrow, Middlesex HA2 0SJ, 1வது பதிப்பு, மார்ச் 2017. (சென்னை 14: கப்பிட்டல் இம்ப்ரஷன்).
160 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழப்போரினால் புலம்பெயர்வுக்குள்ளான தமிழ்மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு குடும்பத்தை எவ்வாறெல்லாம் பாதிக்கின்றது என்பதை மிக யதார்த்தமாக விபரிக்கும் திரைக்கதைப் பிரதி இது. பொதுவான திரைக்கதைப் பிரதிகளுக்குள் அடங்காது, புதிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவங்கள் காட்சிவாரியாகப் பிரிக்கப்பட்டு, கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டங்களும் உணர்வுகளும் இதில் விபரிக்கப்பட்டுள்ளன. அதனால் ஒரு நாவலைப் படிக்கும் உணர்வினை இத்திரைக்கதை வாசகரிடம் ஏற்படுத்துகின்றது. நூலாசிரியர் பிரித்தானியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புக் கலையை முறைப்படி கற்றவர். கனடாவில் வெகுகாலமாக ஊடகத்துறையில் முக்கிய பங்களிப்புகளை நல்கிவருபவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61626).