இ.பாலசுந்தரம். யாழ்ப்பாணம்: நாட்டார் வழக்கியல் கழகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1990. (யாழ்ப்பாணம்: மேர்க்குரி அச்சகம்).
85 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 24×18 சமீ.
சங்க இலக்கியத்தில் மருத்துவக் கருத்துக்கள் 1, சங்க இலக்கியத்தில் மருத்துவக் கருத்துக்கள் 2, திருக்குறளில் மருத்துவக் கருத்துக்கள், ஆசாரக் கோவையில் ஆரோக்கிய வாழ்வுப் போதனைகள், இலக்கியத்தில் மருத்துவம்: ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம்,
திருமந்திரத்திற் கரு உற்பத்திபற்றிய கருத்துக்கள், திருமந்திரம் கூறும் யோகநெறியும் ஆரோக்கிய வாழ்வும், திருமந்திரத்தில் உடல்பற்றிய கருத்துக்கள், சித்தர் பாடல்களில் மருத்துவக் கருத்துக்கள், சோழர் சாசனத்தில் மருத்துவச் செய்திகள் ஆகிய பத்துக் கட்டுரைகளின் வழியாக இந்நூல் தமிழ் இலக்கிய நூல்களில் சொல்லப்பட்ட தமிழ் மருத்துவம் சுகநலம் சார்ந்த கருத்துக்களை எடுத்துக்கூறுகின்றது. கலாநிதி இ.பாலசுநதரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். பின்னாளில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்துசென்று அங்கும் இலக்கிய அறிவியல் பணியாற்றிவருகின்றார்.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11145).