12119 – அப்பரும் சுந்தரரும் அருளிய அற்புதத் திருப்பதிகங்கள்: பதிக விளக்கத்துடன்.

சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: திருவருள் குலசிங்கம் அந்தியேட்டித்தின வெளியீடு, 27/12, பரக்கும்பா பிளேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

x, 174 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

இந்நூலில், சூலை நோய் கொடுத்துச் சைவத்துக்கு மீட்டமை, மதங்கொண்ட யானை வலம் வந்தமை, திருவையாற்றிற் கைலைக் காட்சி கண்டமை, கல் தெப்பமாகியமை, அரவுதீண்டி இறந்த மைந்தன் உயிர் பெற்றமை, தோன்றாத்துணை ஆயவர், திரிசூல இடப இலச்சினைப் பொறிப்பு, திருமறைக் காட்டில் வேதங்களாற் காப்பிடப்பட்ட கதவு திறந்தமை, வடதளியில் மறைந்த சிவாலயத்தைத் தோற்று வித்தமை, நீற்றறை குளிர்ந்த பொய்கைக்கரை ஆனமை, திருநின்ற செம்மை (திருவடித் தீட்சையுடனாதல்), மாயை வசப்படாது சிவபக்தரானமை, தாம் யார்க்கும் குடியல்லாதவனாகிச் சரணடைந்தமை, சிவானுபவ உணர்வு வழி ஆகிய 14 அற்புதங்களைக் கூறும் திருப்பதிகங்களும் அவற்றுக்கான பதிக விளக்கங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல், பன்னாலை, தெல்லிப்பழை திருவருள் குலசிங்கம் (15.4.1929-20.3.2004) அவர்களது அந்தியேட்டி வெளியீடாக 19.4.2004 அன்று வெளியிடப்பட்டது

ஏனைய பதிவுகள்

12911 – மக்கள் நேசன் கார்த்திகேசன் மாஸ்டர்.

வீ.சின்னத்தம்பி. வட்டுக்கோட்டை: வீ. சின்னத்தம்பி, வட்டு மேற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (யாழ்ப்பாணம்: அருண் பிறின்டேர்ஸ்). 60 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 35., அளவு: 20 x 14 சமீ. இலங்கை

12150 – திருவாசக ஆராய்ச்சியுரை: முதலாம் பாகம்.

சு.அருளம்பலவனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: அ.சிவானந்தநாதன், காரைநகர், 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). (16), 480, ix பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ. மணிவாசகர் அருளிச் செய்த

12393 – சிந்தனை: தொகுதி I இதழ் 1 (ஜனவரி 1976).

அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, தை 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி). (7), 68

12461 கலைவிழா 1999.

கே.ஆர்.விக்டர் (பொறுப்பாசிரியர்), அ.டிலோஜன் (இதழாசிரியர்). கொழும்பு 4: தமிழ் இலக்கிய மன்றம், புனித பேதுரு கல்லூரி (St. Peter’s College), 1வது பதிப்பு, மார்ச் 2000. (கொழும்பு 12: ரஜனி பிரின்டர்ஸ், நுபு 2,

14811 வண்டொன்று இரு மலர்கள்(நாவல்).

எம்.சி.ஜெஸீல். கொழும்பு 13: சபிகலா வெளியீடு, 250-BG 3, ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1987. (கொழும்பு 13: ஸபீனா அச்சகம், 250-BG 3, ஆட்டுப்பட்டித் தெரு). (8), 67 பக்கம், விலை:

14103 இந்து தருமம் 2001.

சோ.ரவீந்திரன், பரா.ரதீஸ் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2001. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை). xix, 106+30 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,