12771 – அநுபவங்களும் அநுமானங்களும்: கவிதை நூல்.

இரா.ஜெயக்குமார். உரும்பிராய்: கவிஞர் இரா.ஜெயக்குமார், 68ஃ8, சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2018. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்).

xii, 96 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21 x 14.5 சமீ., ISBN: 978- 955-43965-4-8.

இரா.ஜெயக்குமார், குப்பிழானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது உரும்பிராயில் வசித்து வருகிறார். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிபெற்ற ஆசிரியராகிக் கல்வித்துறையில் இணைந்து சேவையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்து ஊடகங்களில் அவ்வப்போது இவரது கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இவரது புனைபெயர் ‘மேகதூதன்’ என்பதாகும். இந்த நூலில் ‘தமிழே வாழ்க’ என்ற கவிதை தொடங்கி ‘நானும் கவிதையும்’ என்ற கவிதை ஈறாக 55 கவிதைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

11382 கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள்.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). அன்புமணி இரா.நாகலிங்கம், சக்தி சாந்தன், க.தங்கேஸ்வரி, பரதன் கந்தசாமி (பதிப்புத் தொகுப்பாசிரியர்கள்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு, வைகாசி 2000. (கனடா:

14156 நாவலர் நூற்றாண்டு நினைவு விழாச் சிறப்பிதழ் 1979.

நா.சோமகாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, இல. 4, ஹோர்ட்டனடெரஸ், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (148) பக்கம், புகைப்படங்கள்,