12899 – அண்ணாமலை அருள்விளக்கு.

ஸ்ரீ ரமண அடியார் குழு. இலங்கை: பகவான் ஸ்ரீரமண மகரிஷிகள் நூற்றாண்டு விழா வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 1980. (கொழும்பு: ராஜா பிரஸ், 92, பாமங்கடை வீதி).

(20) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 12.5 சமீ.

ரமண மஹரிஷி (டிசம்பர் 30, 1879 – ஏப்ரல் 14, 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி யாவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு நாகசுவாமி என்கிற மூத்த சகோதர் உண்டு. இவரது இயற்பெயர் வேங்கடராமன். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். ரமணரின் முக்கியமான உபதேசம் ‘நான் யார்’ என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான ‘நான் யார்?’ என்ற நூல் முதன்மையானதாகும். ஆதி சங்கரரின் ஆக்கமான ‘ஆத்ம போதம்’ ரமணரால் தமிழில் வெண்பாக்களாக ஆக்கப்பட்டது. பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிஷி, 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆசிரமமாகும். இதன் பின்னர் அவர் சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. இந் நூல் ரமணமகரிஷின் நினைவஞ்சலியாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 235 PAM).

ஏனைய பதிவுகள்

12117 – வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கருணைமலர்: புனராவர்த்தன கும்பாபிஷேக மலர்-2003.

ஹேமா ஷண்முகசர்மா (பதிப்பாசிரியர்). முல்லைத்தீவு: அருள்மிகு ஸ்ரீ வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் தேவஸ்தானம், வற்றாப்பளை, திருத்திய 2வது பதிப்பு, 2003, 1வது பதிப்பு, 1978. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

14255 பனுவல்: சமூக பண்பாட்டு விசாரணை (இதழ் 1-2003).

கசங்க பெரேரா, தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, சமூக, பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம், 119யு, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: கரிகணன்

12282 – பாதுகாப்பாக இருங்கள்.

எஸ்கேப் ஆசிரியர் குழு. தயா தியாகராஜா (தமிழாக்கம்). கொழும்பு: எஸ்கேப் (Escape) பிரசுரம், 25, வைத்தியசாலை வீதி, தெகிவளை 10350, 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: New Ferrine Printers).

14230 மயில்வாகனம். மலர்க் குழு.

புங்குடுதீவு: ந.க.மயில்வாகனம் நினைவுக்குழு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1995. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 529/19, கே.சிறில் சி.பெரேரா மாவத்தை). 128 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

14121 காரைநகர் பண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரப ; பெருமான் தேவஸ்தானம் மஹாகும்பாபிஷேக மலர் 2003.

மலர்க் குழு. காரைநகர்: சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரப் பெருமான் ஆலயம், பண்டத்தரிப்பான்புலம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xx,38 பக்கம் +

12607 – அடிப்படை உயிரியல்: க.பொ.த.உயர்தரம் உயிரியல் பாடத்திட்டம்.

வீ.ச.சிவகுமாரன். கொழும்பு 6: வேதா சிவகுமாரன், 6/1, டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (கொழும்பு: கிரிப்ஸ்). 136 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ.