12947 – பாடிப்பறந்த குயில்கள் (மறைந்த 98 இசைக்கலைஞர்களின் சரிதம்).

முருகு. (இயற்பெயர்: ச.முருகையா). யாழ்ப்பாணம்: ச.முருகையா, வாஹினி பிரசுராலயம், 45 சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஆவணி 2016. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரிண்டர்ஸ், பிரவுண் வீதி).

xv, 303 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21 x 14.5 சமீ.

ஈழத்தின் இசைக்கலைப் பாரம்பரியத்தில் வாழ்ந்து மறைந்த 98 இசைக் கலைஞர் களின் வாழ்வும் பணிகளும் பற்றிப் பேசுவதாக இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலில் வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் 34 பேரினதும், வயலின் கலைஞர்கள் 15 பேரினதும், வீணைக் கலைஞர்கள் 2 பேரினதும், பரதக் கலைஞர்கள் 2 பேரினதும், தவில்-நாதஸ்வரக் கலைஞர்கள் 3 பேரினதும், ஆர்மோனியக் கலைஞர்கள் 2 பேரினதுமாக 58 கலைஞர்கள் பற்றிய புகைப்படங்களுடனான விரிவான தகவல்களும், இவர்களைப் பற்றி அறிந்தவை இவ்வளவே என்ற தலைப்பில் இரண்டாவது பகுதியில் பாட்டுக் கலைஞர்கள், வீணை வித்துவான்கள், வயலின் வித்துவான்கள் எனப் பல்துறைசார்ந்த மேலும் 40 கலைஞர்களின் சுருக்கமான வாழ்வும் பணிகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இக்கலைஞர்களில் பலரும் வாழ்ந்த அக்காலங்களில் அவர்கள்மீது ஊடகவெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கவில்லை. இவர்கள், சக கலைஞர்கள், சிறு ரசிகர் வட்டம் ஆகிய வரையறுக்கப்பட்ட ஆதரவுடன் வாழ்ந்து மறைந்ததால், இன்றைய தலைமுறையினர் இவர்கள் தொடர்பான அடிப்படைத் தகவல்களையே பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. இவர்களது போதனைகள், வேதனைகள், சாதனைகள் என்பவை மக்களை முறையாகச் சென்றடையவேண்டும் என்ற உணர்வுடன் கவிஞர் முருகு அவர்கள் இத்தொகுப்பை தனிமனித முயற்சியாக மேற்கொண்டு வெற்றிகண்டிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 253891CC).

ஏனைய பதிவுகள்

12680 – கருத்திட்ட முகாமைத்துவம்.

தம்பையா லங்காநேசன். கொழும்பு 6: குமரன் புத்தகஇல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2016. (கொழும்பு 6: குமரன் புத்தகஇல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).xxii, 306 பக்கம், அட்டவணை, விலை: ரூபா 950.,

12548 – செந்தமிழப் பயிறசி மாலை: ஆறாம் ஏழாம் வகுப்புகளுக்குரியது.

சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு. கோப்பாய்: செல்வி சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு, விரிவுரையாளர், மகளிர் அரசினர் ஆசிரிய கலாசாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1953. (யாழ்ப்பாணம்: அர்ச் பிலோமினா அச்சகம், 102, மெயின் வீதி). (2),

14054 வெசாக் சிரிசர 2001.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச ஊழியர் பௌத்த சங்கம், 53-3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 2001. (கொழும்பு: ANCL,Commercial

14589 எனது மகள் கேள்வி கேட்பவள்.

கற்பகம் யசோதர (இயற்பெயர்: பிரதீபா கனகாதில்லைநாதன்). சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). 102 பக்கம், விலை:

14518 சைவநாதம்: சைவப் புலவர் பொன்மலர் 1960-2010.

சு.செல்லத்துரை (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: அகில இலங்கைச் சைவப் புலவர் சங்கம், 153, காங்கேசன்துறை வீதி, கொக்குவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). 232 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19

12384 – கொழும்பு இந்துக் கல்லூரி ஆண்டு மலர ; 1997.

க.சேய்ந்தன், க.ரமணேஷ் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: கொழும்பு இந்துக் கல்லூரி, 77, லொரென்ஸ் வீதி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: சரசு அச்சகம்). 190 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: