12951 – நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.

ஸ்ரீ பிரசாந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978- 955-659-557-4.

நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர் (25.05.1878-10.07.1953) தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை போன்ற செய்யுள் உள்ளிட்ட பதினைந்தாயிரம் செய்யுள்கள் வரை சுவையான முறையில் எளிய தமிழில் பாடி வழங்கியுள்ளார். பனையின் பெருமைகளைக் கூறும் தாலவிலாசம், கதிர்காமம் முருகக் கடவுளைக் குறித்து பாடிய கதிரைச் சிலேடை வெண்பா உள்ளிட்ட பல படைப்புக்கள் இன்றும் இவரை எமக்கு நினைவூட்டுகின்றன. வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் அருமையினார் கதிர்காமர், இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தவர் சோமசுந்தரர். தனது இளமைப் பருவத்திலேயே அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை போன்ற நூல் களை இயற்றினார். பதிகம், ஊஞ்சல் என்றும் இரண்டு பிரபந்தங்களையும் பாடிய சோமசுந்தரப் புலவர் கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களையும் பாடினார். நானூ ற்றுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த தாலவிலாசம் என்ற இவரது செய்யுள் நூல் பனையின் பெருமைகளைக் கூறுகிறது. குமரன் பதிப்பகத்தின் இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் வரிசையில் 21ஆவதாக வெளிவந்துள்ள இந்நூல் சோமசுந்தரப் புலவரின் வாழ்வும் பணிகளும் பற்றிச் சுருக்கமாக விளக்குகின்றது. வாழ்க்கைப் பின்புலம், குழந்தைக் கவிஞர், ஆன்மீகக் கவிஞர், சமூகநலக் கவிஞர், தேசம் குறித்த படைப்பாளி, தன்வாழ்வியற் படைப்பாளி, நாடகாசிரியர் தத்துவ அறிஞர், நல்லாசிரியர், மதிப்பீடு ஆகிய பத்துத் தலைப்புகளில் இவை பதிவுசெய்யப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக காலவரிசையில் புலவர் வரலாறு, புலவர் நூற்பட்டியல், வகைமாதிரிக்குச் சில புலவர் பாடல்கள் என்பன தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12815 – வசந்தகால நினைவுகள்: சிறுகதைத் தொகுதி.

கே.ஈஸ்வரலிங்கம். கொழும்பு 14: சினிலேன்ட் வெளியீடு, 13, சென்.ஜோசப் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (கொழும்பு 14: நிரோஷன் பிரிண்டர்ஸ்). 36 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 19 x 15

14450 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: தொடர்களின் கூட்டல்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 40

14418 நீரரர் நிகண்டு.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்), திருமதி பி.ப.செல்வராஜகோபால் (பதிப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், பிரதான வீதி, தோற்றாதீவு, 1வது பதிப்பு, 1984. (தோற்றாதீவு: மனோகரா அச்சகம்). (8), 34+12 பக்கம், விலை: இந்திய ரூபா

12545 – கன்னித் தமிழ் ஓதை மூன்றாம் புத்தகம்.

வ.கி.இம்மானுவேல். கொழும்பு: டீ.பு. இம்மானுவேல், தலைமைத் தமிழ்ப் போதனாசிரியர், கொழும்பு வேத்தியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1962. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட் மாவத்தை). (4), 154

12164 – பன்னிரு திருமுறைத் தோத்திரத் திரட்டு.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். கொழும்பு 2: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், காப்புறுதி இல்லம், 9வது மாடி, 21, வாக்ஷோல் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1992. (கொழும்பு 2:

2894 – புனித பயணம்: சிவபாலன் சாந்தரூபன் நினைவு மலர்.

சு.சிவபாலன் (தொகுப்பாசிரியர்). வவுனியா: சு.சிவபாலன், 40, வைரவ கோவில் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை). 175 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 15 சமீ.