14550 திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதலாண்டு மலர்-ஆனி 1961.

மஹாகவி, பாலேஸ்வரி, ஈழவாணன் (தொகுப்பாசிரியர்கள்). திருக்கோணமலை: திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, ஆனி 1961. (அச்சக விபரம் தரப்படவில்லை). (9), 10-96 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×14 சமீ. இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளின் பல்வேறு சிறந்த படைப்பாக்கங்களுடன் இந்த முதலாம் ஆண்டு மலர் வெளிவந்துள்ளது. கனக.செந்திநாதன் (படித்திருக்கிறீர்களா?-கட்டுரை), வை.சோமாஸ்கந்தர் (திருக்கோணமலை தந்த தமிழ்ச் சான்றோர்கள்-கட்டுரை), உதயணன் (நிறைவு-சிறுகதை), நவம் (அருகில் வந்தாள் உருகி நின்றாள்- சிறுகதை), பவானி (பிரார்த்தனை-சிறுகதை), ஆ.பொன்னுத்துரை (உண்மைக்கு ஒருத்தி-சிறுகதை), முருகையன் (உலாவி வாகவிதை), அ.ந.கந்தசாமி (நான் செய் நித்திலம்-கவிதை), கதிரேசன் (காட்டுவழிகவிதை), அமுது (காலன் கதை-கவிதை), நவாலியூர் சோ.நடராசன் (நவீன சூர்ப்பனகை வருகை-கவிதை), திமிலைத் துமிலன் (நாளை பிறப்பது நம்முலகுகவிதை), செ.வேலாயுதபிள்ளை (விதி ஒறுத்த மாந்தர் -கவிதை), மா.பார்வதிநாதசிவம் (அறம் கூறும் வாழ்வு-கவிதை), ஜி.எஸ்.யோசேப் (அமரனாவாய்-கவிதை), சோமலிங்கம் (வாய்க்காரி-கவிதை), அ.சண்முகதாசன் (நினைவு போதும் -கவிதை), கா.சி.ஆனந்தன் (பிறை நிலவு-கவிதை), பத்மலோசனி முத்துக்குமாரு (இலக்கிய நிதி-கவிதை), நீலாவணன் (இன்றுனக்கும் சம்பளமா? -கவிதை), தனலட்சுமி சுப்பிரமணியம் (கிளிப்பாட்டு-கவிதை), இராஜபாரதி (மூட்டைவிடு தூது-கவிதை), புரட்சிக் கமால் (நாளை வருவான் ஒரு மனிதன் -கவிதை), பரமஹம்சதாசன் (விண்ணமுதம் தருவாள் -கவிதை), அண்ணல் (சிற்றிடையை என் கரத்துள் சேர்ப்பாள் -கவிதை), ஈழவாணன் (கல்லாகிப் போ-கவிதை), மஹாகவி (கண்களும் கால்களும் -கவிதை), ரீ.பாக்கியநாயகம் (பார்த்தல் பலவிதம் -கட்டுரை), பத்மாசனி ஏரம்பு (கைகூடியது- சிறுகதை), தங்கன் (ஆசையினாலே மனம் – சிறுகதை), வி.சிங்காரவேலன் (நேர்மை- சிறுகதை), பா.பாலேஸ்வரி (தண்டனை- சிறுகதை) ஆகிய படைப்பாக்கங்களை இம்மலர் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 43612).

ஏனைய பதிவுகள்

online casino real money

Best online casino app in india Best online casino bonus Online casino login Online casino real money Our experts check real money online casino bonuses