14606 சிறு கீற்று (கவிதைகள்).

தாரணி இந்திரச்செல்வன். நுவரெலியா: வேலு இந்திரச்செல்வன், அலகல தோட்டம், 1வது பதிப்பு, ஜுன் 2011. (கொழும்பு 6: Fast Printers, 289-1/2 காலி வீதி, வெள்ளவத்தை). 44 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. மலையகத்தைச் சேர்ந்த வேலு இந்திரச் செல்வன்-தாரணி துரைராஜ் திருமண வாழ்வில் இணையும் வேளை முதல் பிரசவமாக இக்கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்கள். வாழ்வை ஆரம்பிக்கும்போதே சமூகத்திற்காக வாழ்வோம் என்று அவர்கள் கவிதை மூலம் பிரகடனப்படுத்திக்கொள்கிறார்கள். வேலு இந்திரச் செல்வன் அலகல தோட்டத்தைச் சேர்ந்தவர். க.பொ.த.உயர்தரத்துடன் ஆசிரியராகி கொட்டகல ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்றவர். நு/வ/ரிலாமுல்ல தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். சென் லெனாட்ஸ் தோட்டத்தினைச் சேர்ந்த தாரணி சென்லெனாட்ஸ் தமிழ் வித்தியாலயம், ராகலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் ஆசிரியக் கல்வியைப் பெற்றவர். இவர் நு/ஹ/எலமுல்ல தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

12654 – கணக்கீடு பகுதி 3.

நாகலிங்கம் யோகராசா. கொழும்பு 6: ஜனனி வெளியீட்டகம், 181/4, 3/1 W.A. சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஆவணி 2004. (கொழும்பு 6: கு.பிரதீபன், எஸ்.பிரின்ட்). iv, 216 பக்கம், விலை: ரூபா 160.,

14239 ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணம் இரண்டாவது அசுரகாண்டம் மூலமும் உரையும்.

கச்சியப்ப சிவாசாரியார் (மூலம்), ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (உரையாசிரியர்). பருத்தித்துறை: ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள், தருமாலய வெளியீடு, 2வது பதிப்பு, 1928, 1வது பதிப்பு, 1909. (பருத்தித்துறை: கலாநிதியந்திரசாலை). 656 பக்கம், விலை: 4ரூபா 8 அணா,