14636 பார்வைகள் (கவிதைத் தொகுதி).

அபீர்ராஜன் (இயற்பெயர்: அன்ரனி பீற்றர்). யாழ்ப்பாணம்: அபீர்ராஜன், 36, சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). viii, 84 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955- 42677-0-1. யாழ்ப்பாணக் கல்வி வலய ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றிய அபீர்ராஜனின் சமூக விழிப்புணர்வுக் கவிதைகள் இவை. அவரது மணிவிழா நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. உண்மைக்கு மிக நெருக்கமான இக்கவிதைகள், தனது நேர்கொண்ட பார்வையால், மனித வாழ்வின் அனைத்து முகங்களையும் ஆழத் தரிசிக்கின்றன. மேலான வாழ்வுக்கு உகந்த விழுமியங்களை ஆராதிக்கும் அதே வேளையில் சமூகத்தில் நிலவும் அநீதியான மேலாண்மைகளையும் கேடுகளையும் சாடிநிற்கின்றன. செம்மொழியாம் தமிழ் என்ற கவிதையில் தொடங்கி மருதமடு என்ற கவிதை ஈறாக இத்தொகுப்பில் அறுபது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

17457 சின்னச் சந்துனி.

பிரசாதி சஷிமாலி (கதை), அனுத்தரா ஜயமஹா (ஓவியங்கள்). கொழும்பு: Let’s Read Asia, values for all Book Lab, Asia Foundation,1வது பதிப்பு, 2021. (கொழும்பு 12: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேனா அன் கொம்பெனி,

13928 கந்தரோடை தந்த தமிழறிஞர் ந.சி.கந்தையாபிள்ளையின் தமிழ்த்தொண்டு.

சு.ஸ்ரீகுமரன் (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: பாமா வெளியீடு, 118, ஸ்ரேசன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (சுன்னாகம்: விக்னேஸ் பிரின்டர்ஸ்). vi, 7-36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.